நல்ல வாய்ப்பு.. தவறவிட்ட அஞ்சல் துறை.. வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும் நன்மை தரும் வாய்ப்பு
சென்னை: இன்றைக்கு அமேசான் செய்து கொண்டிருப்பதை அஞ்சல் துறை செய்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அதன் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளது. அமேசான், ப்ளிப்கார்ட், ஜியோ என இன்னும் எத்தனையே ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரிக்கு போக முடியாத இடங்களில் எல்லாம் அஞ்சல் துறையால் போக முடியும்.
ஆனால் அஞ்சல் துறை மூலம் பொருட்களை வியாபாரிகளிடம் இருந்து ஒருங்கிணைத்து ஒரு தளத்தை உருவாக்கி லாபம் முழுவதும் நம் வியாபாரிகளுக்கும், நம் அரசுக்கும் செல்வதற்கான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
எல்லாமே ஆன்லைன் என்று வந்த பின்னர், அஞ்சல் துறையை பலப்படுத்தி அதன் மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நோக்கி அரசு நகருவது தானே நலம்.

சேவை மனப்பான்மை
எத்தனையோ கொரியர்கள் வந்துவிட்டன. எத்தனையோ ஆனலைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வந்துவிட்டன. ஏன் எத்தனையோ வங்கிகள் வந்துவிட்டன. அத்தனையும் சேவை மனப்பான்மையுடனான தொழில் செய்கின்றன. அவர்கள் லாபம் ஒன்றே அவர்கள் இலக்கு. அதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கு தான் சேவை துறையில் தடம் பதித்துள்ளன. ஆனால் அஞ்சல் துறை மட்டுமே சேவை மனப்பான்மையுடனும், அர்பணிப்புடன் செயல்படுகிறது.

தனியார் துறை வித்தியாசம்
தனியாருக்கும், அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். 10 பேர் கூட கொரியர் அனுப்பாத ஊருக்கு கொரியர் நிறுவனங்கள் கடை போட மாட்டார்கள். பல ஆயிரம் பேர்வங்கி கணக்கு தொடங்காத ஊரில், தனியார் வங்கிகள் தொடங்கப்படாது. ஆனால் இவை இரண்டையும் அஞ்சல்துறை செய்து வருகிறது. அடிப்படையில் அஞ்சல் துறையை பலப்படுத்தி இருந்தால், இன்றைக்கு இந்தியாவின் பல லட்சம் கோடி பணம், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைக்களில் சேர்ந்திருக்காது. மாறாக மக்களின் கைகளுக்கே வந்துசேர்ந்திருக்கும்.

கொரியர் லாபங்கள்
ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்திற்கு 500 முதல் 1000 பார்சல் ஆன்லைன் ஆர்டர் மூலம் டெலிவரி ஆகிறது என்று வைத்துக்கொண்டால், தமிழகம் முழுவதும் எத்தனை ஆர்டர்கள், இந்தியா முழுவதும் எத்தனை ஆர்டர்கள், எத்தனை லட்சம் டெலிவரி என்று யோசித்து பாருங்கள். ஒரு டெலிவரிக்கு 30 ரூபாய் என்று வைத்தால் கூட பல ஆயிரம் கோடியை தொடும். ஆன்லைன் நிறுவனங்களின் லாபம் தனி கணக்கு.

வணிகர்கள் வாழ்வாதாரம்
ஆன்லைன் நிறுவனங்களைப் போல் அஞ்சல் துறை இந்த சேவையை செய்திருந்தால் அந்தந்த மாவட்டங்களின் உள்ளூர் வியாபரிகளின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து திட்டங்களை உருவாக்கி வணிகர்களை காப்பாற்ற முடியும். அத்துடன் மக்களுக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக கிடைக்கும். அஞ்சல்துறையால் ஆன்லைன் தள சேவையை சிறப்பாக செய்யவும் முடியும்.

வணிக சந்தை
அஞ்சல்துறையில் கணக்கு இருந்தால் போதும் அவர்கள் எந்த பொருளையும் எங்கிருந்தும் ஆன்லைனிலோ அல்லது அஞ்சலக அலுவலகத்திலோ ஆர்டர் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கினால், நிச்சயம் அஞ்சல் துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும். இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இயங்கினால் மிகப்பெரிய வணிக சந்தையை அஞ்சல்துறையால் கைப்பற்ற முடியும். மக்களுக்கு நியாயமான சேவையும் கிடைக்கும்.

தடுமாற்றம்
ஆனால் துரதிஷ்டவசமாக இங்கே ஆன்லைன் தளங்களால் வியாபாரிகளின் வியாபாரம் அழிக்கப்படுவது ஒருபுறம் எனில், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் மிக மோசமான தள்ளுபடிகளை அளித்து மக்களை கவர்வதால் உள்ளூர் வியாபாரிகள் போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். எனவே அமோசன் , ப்ளிப்கார்டின் வேலையை நமது அஞ்சல்துறை செய்ய தொடங்கினால், புதிய மாற்றம் உருவாகும். குறிப்பிட்ட சிலருக்கே லாபம் போவது தடுக்கப்படும்.குறிப்பிட்ட சிலரே வணிக போட்டியாளராக உருவெடுப்பது தடுக்கப்படும். அனைவருக்குமான சமமான வாய்ப்பு கிடைக்கும். இது யோசனை மட்டுமே.. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசு.. இதை ஏற்குமா என்பது கடினம் தான்..!
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications