வடியாத மழை நீர்.. அழுகும் நெற்பயிர்கள்.. நாகை விவசாயிகள் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகையில் மூன்றாவது நாளாக மழைநீர் வடியவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றாதது தான் மழை நீர் வடியாததற்கு காரணம் என்று கூறி, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ராவிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.

நாகை மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம் தலைவர் அப்துல் மிஸ்ரா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் சம்பா பயிர்களை பார்வையிட்ட அவர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

 விவசாயிகள் கண்ணீர்

விவசாயிகள் கண்ணீர்

அப்போது கன மழை பெய்து மூன்று நாட்களாகியும் வயல்வெளிகள் மழைநீர் வடியாததற்கு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாதது தான் காரணம் என விவசாயிகள் வேதனையுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் மூழ்கிய பயிர்களை எடுத்து அழுகிசேதமடைந்து இருப்பதை கண்ணீர் மல்க காண்பித்தனர்.

கணக்கெடுக்கப்படும்

கணக்கெடுக்கப்படும்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் வடிவதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருவதாகவும், மழை வெள்ள சேதங்கள் குறித்து விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் ஓரிரு நாட்கள் கழிந்த பின்னரே பயிர் சேதம் குறித்து தெரியவரும் பயிர் சேதம் குறித்த விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின்போது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 மீட்பு படையினர்

மீட்பு படையினர்

இதனிடையே, அரக்கோணத்திலிருந்து 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கமாண்டர் பிகே சர்மா தலைமையில் நாகை வந்து சேர்ந்துள்ளனர். மிக கனமழை காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

குளம் போல

குளம் போல

நாகை மாவட்டம் திருக்குவளை பகுதியில் பெய்த கனமழையால் விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கி குளம்போல் உள்ளது. அங்குமட்டுமல்ல மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+