நீ என்ன பண்ணுவ சொல்லுயா? வார்த்தையை விட்ட கங்கை அமரன்.. "சங்கி".. விளாசிய திருமாவளவன்.. காரசார மோதல்
சென்னை: அம்பேத்காரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியதற்கு விசிக எம்பி திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். கங்கை அமரன் கொடுத்த பேட்டி ஒன்றை பகிர்ந்து திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று பாராட்டி இருந்தார்.
அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். இருவரும் ஒரே மாதிரியான தலைவர்கள் என்று இளையராஜா பாராட்டி இருந்தார். இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

விளக்கம்
பாஜக இந்த கருத்தை ஆதரித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

கங்கை அமரன் பேட்டி
இந்த நிலையில் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஐ தமிழ் என்ற செய்தி சேனலுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்தார். பாஜக உறுப்பினரான இவர், இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்று கூறுகிறார்கள். நான்தான் அப்படி எழுதிக்கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜாவுக்கு பதில் நான் இசை அமைத்தேன் என்பார்களா? ஆமா நான் தான் எழுதினேன்.. அந்த முன்னுரை நான் தான் எழுதினேன்.. நீ என்ன பண்ணுவ? இப்படி எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இல்லாத நாய்.. என்று கடுமையான விமர்சனம் செய்தார்.

பேட்டியில் சர்ச்சை
அதோடு அம்பேத்கார் விருதை.. திருமாவளவன் என்ற அம்பேத்கார் வாங்கி.. ஸ்டாலின் என்ற அம்பேத்காருக்கு கொடுத்ததாக சொன்னார்களே.. அதை ஒப்புக்கொண்டாயா? அதை ஒப்புக்கொண்டாயா? சொல்லு.. சொல்லு என்று கோபமாக கத்தி பேசினார். கங்கை அமரன் இப்படி கோபமாக கத்தி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இணையத்தில் இவருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு ஒப்பீடு
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் இதற்கு பதில் அளித்துள்ளார் அதில், ஒப்பீடு செய்வதில் இருவகை உண்டு. 1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு
கரும்பு இனிக்கும் ;
கனிகள் இனிக்கும் -
இது நேர்மறை
எதிர்மறை ஒப்பீடு
கரும்பு இனிக்கும் ;
வேம்பு கசக்கும் -
இது எதிர்மறை
அம்பேத்கர் ; பெரியார் -
இது நேர்மறை.
அம்பேத்கர் ; மோடி-
இது எதிர்மறை.
அம்பேத்கரும் மோடியும்...
எதிர் எதிர் துருவங்கள்.
எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல்.
பாவலரின் சகோ'க்கள்
பரிவார்களின் பலிஆடுகளா? என்று திருமாவளவன் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பதிலடி
முன்னதாக அம்பேத்கர் - மோடி இருவரை ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது குறித்து திருமாவளவன் விமர்சனம் செய்து இருந்தார். அதில், இளையராஜாவிற்கு என்ன நெருக்கடியோ இப்படி பேசி உள்ளார். அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட முடியுமா? மோடி சமத்துவத்திற்கு என்ன செய்தார்? சாதி ஒழிப்பிற்கு என்ன செய்தார்? அவர்கள் பெண்கள் முன்னேற என்ன செய்தார்? அவரை எப்படி அம்பேத்காருடன் ஒப்பிட முடியும்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications