சட்டசபை தேர்தல்: மநீம வேட்பாளராக போட்டியிட பிப் 21 முதல் ஆன்லைனில் விருப்ப மனு- ரூ25,000 கட்டணம்!
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக போட்டியிட பிப்ரவரி 21-ந் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விருப்ப மனுக்களை ரூ25,000 கட்டணத்துடன் ஆன்லைனில் தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரூ25,000 கட்டணத்துடன் www.maiam.com மூலமாக ஆன்லைனில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விருப்ப மனுக்கள் பெறப்படும் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தியாவிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்தான் எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதேபோல் கட்சியில் உறுப்பினர் அல்லாதவர்களும் தாங்கள் எம்.எல்.ஏ.வாக தகுதி இருப்பின் உரிய கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஒருவரே எத்தனை தொகுதிக்கு வேண்டுமானாலும் ஒரு தொகுதிக்கு ரூ25,000 கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கமல்ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை முழு விவரம்:
தனது முதல் தேர்தலிலேயே இத்தனைப் பிரம்மாண்டமான மக்கள் ஆதரவுடனும் நேர்மையான திறமையாளர்கள் புடை சூழவும் தேர்தலைச் சந்திக்கிற கட்சி எனும் பெருமிதத்துடன் உங்களை வாழ்த்துகிறேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
# தலை _ நிமிரட்டும் _ தமிழகம் pic.twitter.com/tBC6Q60yCt












Click it and Unblock the Notifications