முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10-ந் தேதி முதல் 2 வார காலத்துக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு (லாக்டவுன்) அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் முழுமையாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பரவல் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. 2 வாரத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு போராடி வருகிறது.
இந்த முழு ஊரடங்கை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவோம். முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள பொருட்களை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ உரை:
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! https://t.co/Q1Z2skB6v1
— M.K.Stalin (@mkstalin) May 8, 2021












Click it and Unblock the Notifications