ராஜீவ் கொலை வழக்கு: ஏழுபேர் விடுதலையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது - கே.எஸ். அழகிரி
எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்று மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழுபேரை விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்று மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாரதப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் 30 ஆவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை அருகில் உள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திரு கே வி தங்கபாலு மற்றும் மாநில நிர்வாகிகள் பின்பு சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான் இந்தியா 21ம் நூற்றாண்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் இளைஞர்கள் வளர்ச்சியும் அவருடைய காலகட்டத்தில்தான் தொலைத்தொடர்பு துறையும் அவர் வகுத்த திட்டங்கள் தான் இன்று அனைவர் கையிலும் கைபேசி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வளர்ச்சிக்காக பாடுபட்டார்
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாவை அழைத்து சென்றவர் ராஜிவ்காந்தி என்றும், தொழில்துறையில் மாபெரும் சாதனையை உருவாக்கிய அவர், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

அழுத்தம் தரக்கூடாது
தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய தினம் ஏழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்புதல் கிடையாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்களே செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றார்.

7 பேரை மட்டும் விடுதலை செய்வது எப்படி
தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். எனவே தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக 7 பேரை மட்டும் விடுதலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.

காங்கிரஸ் வலியுறுத்தாது
திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்து இருந்தனர், ஆனால் காங்கிரஸ் கட்சி அதுகுறித்து எதுவும் வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். அதேபோல் காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தேர்வில் எந்தவித காலதாமதமும் இல்லை என்ற அவர், இதுகுறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் கூறினார்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications