Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா.. கடும் உஷார் நிலை.. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,459 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் 9,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Tamilnadu Lockdown: increases fine for not wearing masks | OneIndia Tamil

    சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா

    தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா

    மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    வீட்டு தனிமை

    வீட்டு தனிமை

    உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

    யாரை பரிசோதிக்க வேண்டும்

    யாரை பரிசோதிக்க வேண்டும்

    அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

    ஆக்சிஜன் இருப்பு

    ஆக்சிஜன் இருப்பு

    அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்ம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+