இன்னசென்ட் திவ்யாவுக்கு "இந்த" போஸ்டிங்கா.. பறந்து வந்த ஆர்டர்.. 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்
இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை: நீலகிரி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது... அத்துடன் தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப நாட்களாகவே, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
நேற்று முன் தினம்தான் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் உத்தரவு அறிவிப்பு வந்தது.. இப்போது 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு வந்துள்ளது.

இயக்குனர்கள்
அதன்படி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்... ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்... பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிரான்ஸ்பர்
இதில் இன்னசென்ட் திவ்யாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, பரவலாக அனைவரும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.. கடந்த 2019-ல் இன்னசென்ட் திவ்யாவை டிரான்ஸ்பர் செய்வதற்கான பணிகள் நடந்து வந்ததாகவே தெரிகிறது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியில்லாமல் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அவசியம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திடீரென இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என்று தமிழக அரசு கூறியிருந்தது.. அத்துடன், நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இந்த இடமாற்றம் அவசியம் என்றும் விளக்கம் கூறியிருந்தது.. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கடந்த 16ம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.

கலெக்டர்
இதற்கு பிறகு, புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டாரே தவிர, திவ்யாவுக்கு எங்கு இடமாற்றம் என்பதற்கான அறிவிப்பு வராமலேயே இருந்தது.. இதனிடையே புதிய கலெக்டராக அம்ரீத் பதவிஏற்றுக் கொண்டார்.. எனினும், இன்னசென்ட் திவ்யாவிற்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இப்போது அவர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்...

நீலகிரி
நீலகிரியில் மாவட்ட மக்களின் நன்மதிப்பை நேரடியாகவும், அபரிமிதமாகவும் பெற்றுள்ள இன்னசென்ட் திவ்யா, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக செயல்பட்டவர் என்பதுடன், நீலகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தவர்.. யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக, ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் சிறப்பாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications