அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. இந்த "2 நாளும்" ரேஷன் கடைகள் இயங்காது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கான, வேலை நாட்களை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிகொண்டிருக்கிறது.. வரும் நவம்பர் 12ம் தேதி பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள்.. எனவே, இப்போதே தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன.

உணவுத்துறை: இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, தமிழக உணவுத்துறையானது, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வரும் நிலையில், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும், மக்கள் இன்றைய நாளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டிருந்தது.
விடுமுறைகள்: அதன்படியே, கடந்த 5ம்தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கின.. பொதுமக்களும் ரேஷன் பொருட்களை தவறாமல் சென்று பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கு நவம்பர் 13 மற்றும் 25-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதியும், நாளையும் வேலை நாட்களாக இருப்பதால் அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி: அதேபோல, புதுச்சேரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் 400 ரூபாய் வங்கிகளில் செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையொட்டி, அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளதால், இதுகுறித்த தீபாவளி சிறப்பு அறிவிப்புகளை, தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications