தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு.. காலையில் இருந்து ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்!
பொங்கல் பரிசு தொகுப்புகளை இன்று முதல் ரேஷனில் பெற்று கொள்ளலாம்
சென்னை: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்காகவே, தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது..

கரும்பு
இதில், கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் மற்றும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

ஊழியர்கள்
ஆனால், பொங்கல் பரிசு பொருட்கள் மண்டல கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்வதில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது... மேலும், சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத சூழலும் ஏற்பட்டது.. அதனால், தமிழக அரசு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுமுறை
ஞாயிற்று கிழமை முழு லாக்டவுன் காரணமாக நேற்று ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்பதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை இதுவரை பெறாதவா்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பரிசு தொகை
அதில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வர வேண்டிய நிலுவையிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அன்றைய தினம் நியாய விலைக் கடைகளை மட்டும் திறந்து கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பொருள்களைப் பெற்று இறக்கி வைக்கும் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் காலை முதல் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications