பிறப்பு சான்றிதழ் இல்லை.. ஆதார் எடுப்பதில் பிரச்சனை.. திருவள்ளூர் விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் "பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்துக்காக அரசு பள்ளியில் சேர்க்க திமுக அரசு மறுக்கிறது என்று குற்றம்சாட்டினார். இந்த தகவலை மறுத்துள்ள தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இன்றைக்கு ஆதார் கார்டு இல்லாவிட்டால் ஒருவர் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி கல்லூரி படிப்பு, கல்வி உதவி தொகை, வங்கி கணக்கு தொடங்குவது என எல்லாவற்றிலும் சிக்கல் நிலவுகிறது. ஆனால் ஆதார் கார்டு புதிதாக வாங்க வேண்டும் என்றால் பிறப்பு சான்றிதழ் வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஒருவர் ஆதார் கார்டு பெற முடியாது. பிறப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே ஆதார் கார்டு தற்போது வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழில் என்ன தவறு இருந்தாலும், அதில் உள்ளபடியே சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழில் இனிஷியல் அந்த காலத்தில் எல்லாம் இருக்காது. அதேபோல் ஆதார் கார்டும் இனிஷயல் இல்லாமல் மட்டுமே வழங்கப்படுகிறது. இது ஒரு வகையில் சிக்கலாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் "பிரதமர் மோடி நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தார். ஆனால் இங்கு அதே சமூகத்தை சேர்ந்த மாணவனை பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாத காரணத்துக்காக அரசு பள்ளியில் சேர்க்க தி.மு.க. அரசு மறுக்கிறது. இதுதான் சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில கல்விக்கொள்கையின் ஒரு பகுதியா?" என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த மாணவன் தனது பெற்றோருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இதனை பலரும் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவரின் சேர்க்கை நீக்க பதிவேடு, வருகை பதிவேடையும் வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "வீடியோவில் இடம்பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 2023-ல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாக கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.
11.8.25 அன்று அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாக கூறி மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த மாணவனுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் ஆதார் அட்டை எடுப்பதில் சிக்கல் இருந்துள்ளது. ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும். அதுகுறித்த வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த மாணவனுக்கு கோட்டாட்சியரால் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வதந்தியைப் பரப்பாதீர்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications