விவசாயிகள் கவனத்திற்கு! வாய்ப்பை நழுவ விடாதீங்க! விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற வழி!
சென்னை: விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
e-NAM போர்ட்டலில் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக வர்த்தகர்கள் மற்றும் FPO களுக்கு இதுவரை 4794 USL வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு;

மின்னணு வேளாண் சந்தை
இதுவரை ரூ.1909.86 கோடி மதிப்பிலான 38.07 இலட்சம் எண்கள் தேங்காய் மற்றும் 91.32 இலட்சம் குவிண்டால் இதர வேளாண் விளைபொருள்கள் தேசிய மின்னணு வேளாண் சந்தையின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு ரூ.1458.79 கோடி மின்னணு வலைதளத்தின் வாயிலாக 5,13,681 விவசாயிகளுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த மின்னணு வர்த்தகத்தின் மூலம் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை, விவசாயிகளுக்கு நல்ல விலை, விரைவு ஏல முறை, விளைபொருட்களின் தரத்திற்கேற்ற விலை மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வணிகர்கள் -விவசாயிகள்
வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரிவாக்கப்பட்ட சந்தை அணுகலை வழங்க, மாநிலத்தில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதனால் விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் மற்றும் வணிகர்கள் மாநிலத்தை ஒரே சந்தையாக அணுக முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த செயல்பாடு இருப்பதால், வர்த்தகர்கள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் செய்வது சிரமமாக உள்ளது. e-NAM போர்ட்டலில் வர்த்தகம் செய்வதற்கு வசதியாக வர்த்தகர்கள் மற்றும் FPO களுக்கு இதுவரை 4794 USL வழங்கப்பட்டுள்ளது.

இ-நாம் வர்த்தகம்
ஆகஸ்ட் 2, 2019 முதல் சந்தைகளுக்கு இடையேயான இ-நாம் வர்த்தகம் தொடங்கப்பட்டது. இதுவரை ரூ.10394 இலட்சம் மதிப்பிலான 63371 தேங்காய்கள், 99001 மெட்ரிக் டன் இதர விளைபொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இ-நாம் இல் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை இணைக்க, தமிழகத்தின் 108 FPOக்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ-நாம் இன் கீழ் FPO வர்த்தகம் மார்ச் 2018 முதல் தொடங்கப்பட்டது. 188 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. 10667 Qtl விளைபொருட்கள் இ-நாம் சந்தைகளில் ரூ.176.19 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.

நல்ல விலை
விவசாயிகள் இ-நாம் தளத்தின் வாயிலாக சந்தைகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் ஆகியவற்றை மேற்கொண்டு தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறலாம். மேலும், வர்த்தகர்களும் தரமான விளைபொருட்களை வாங்கி செல்ல இயலும்.
எனவே அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அருகில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications