திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் திமுக தோற்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    #TNLocalBodyElection சென்னை: தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.

    தமிழகத்தில் 2016-க்குப் பிறகு தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    சென்னை மந்தவெளி 126 வது வார்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது வாக்கினை பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொளத்தூரில் திமுகவினர் வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்குச்சாவடிக்குள் திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    பணப்பட்டுவாடா

    பணப்பட்டுவாடா

    அதிமுக பணத்தை நம்புவது இல்லை. திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். பூத் சிலிப்பை அரசு அலுவலர்கள் வழங்க வேண்டும். ஆனால் திமுகவினர் விநியோகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்களாக‌ இருக்கிறது. அதிமுகவுக்கு வாக்காக மாறும். திருவான்மியூரில் பணப்பட்டுவாடாவில் பிடிபட்டவர்கள் அதிமுகவினர் கிடையாது.

    கோயமுத்தூர்

    கோயமுத்தூர்

    கோவையில் தேர்தலில் கலவரம் செய்ய குண்டர்கள் குவிக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், இதுவரை, குண்டர்கள் வெளியேற்றப்படவில்லை. தற்போதய நிலவரப்படி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதே நிலை மாலை வரை நீடிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

     வாக்குப்பதிவு

    வாக்குப்பதிவு

    இதுவரை பெரிய அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை, அமைதியாக வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வருமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+