தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு?.. முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கடும் நடவடிக்கை
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மதுக்கடைகள் திறந்து வைக்க கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஏற்கனவே கூறி இருக்கிறோம்.

விலை பட்டியல்
எந்த மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அதற்கு அந்த மாவட்ட மேற்பாளர் தான் பொறுப்பு என்று கூறி இருக்கிறோம். அனைத்து மதுக்கடைகளுக்கும் முன்னால் விலை பட்டியல் வைக்கப்படும். விலைபட்டியலுக்கு மேலாக கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் முடிவெடுப்பார்
நம்மை பொறுத்தவரை மதுக்கடைகள் மூலம் வருவாய் வருவது முதன்மையான நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். மதுக்கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். மதுக்கடைகள் குறைப்பது என்பது கொள்கை ரீதியான முடிவு. வரக்கூடிய காலங்களில் டாஸ்மாக் நிர்வாகத்தினை எப்படி செயல்படுத்துவது? என்று முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு கூறுவார்.

குறைபாடுகள் என்னென்ன?
வரக்கூடிய காலங்களில் டாஸ்மாக் துறையில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதோ, அதனை இனி வரக்கூடிய ஆய்வு கூட்டங்களில் ஆலோசிப்போம். விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை சிறிது குறைக்கப்பட்டாலும்., அதன்பிறகு கடைகள் பல்கி பெருகி விட்டன. தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது கலாசாரம் பெருகி விட்டதால், குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு மதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே அரசு கூடிய விரைவில் டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications