குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக மாறியது.

TN Political parties hold Portest agains CAA

இப்போராட்டத்தில் போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதாக கூறி நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ, திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இடதுசாரி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பத்திரிகையாளர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+