தமிழகத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை!
சென்னை: தமிழகத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 12 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர். 30 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000க்கு கீழ் இருந்து வருகிறது. கொரோனா மரணங்களும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 1,01,764 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 5,18,18,972 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

918 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,15,632. இன்று மட்டும் 918 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 26,69,848 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,296.

30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
சென்னையில் இன்று 122 பேருக்கும் கோவையில் 123 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. சென்னையில் கொரோனாவால் 4 பேரும் கோவையில் 2 பேரும் உயிரிழந்தனர். தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் இல்லை என்கிறது தமிழக சுகாதாரத்துறை புள்ளி விவரங்கள்.

தமிழக ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 9,488. ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை நேற்று 9,616 ஆக இருந்தது. இந்தியாவில் இன்று காலை வரையிலான 24 மணிநேர நிலவரப்படி நேற்று மட்டும் 30,20,119 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 112.34 கோடியைக் (1,12,34,30,478) கடந்தது.

இந்திய நிலவரம்
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 141 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,926 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,34,096 ஆக உள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications