Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தின லீவு.. சென்னையிலிருந்து 500 ஸ்பெஷல் பஸ்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்களும் விரிவடைந்துக்கொண்டே செல்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சென்னை போன்ற நகரங்களை நோக்கி தொடர்ந்து குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டியுள்ளது. மற்ற நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். இப்படி இருக்கையில் இவர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

Transport Department has announced that special buses will be run during the weekend and Independence Day holidays

எனவே இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் தவிர திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், திருவண்ணாமலை கோயில் கிரிவல நாட்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதாவது, வரும் 12ம் தேதி முதல் வழக்கத்தை விட 1,100 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இது குறித்து போக்குவரத்து கழகம் விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 15ம் தேதி பயணம் மேற்கொள்ள இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதே 11ம் தேதியான வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்ள 18,199 பயணிகளும், 12ம் தேதி 6,949 பயணிகளும், 13ம் தேதி 4,514 பயணிகளும் சென்னையிலிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

Transport Department has announced that special buses will be run during the weekend and Independence Day holidays

இந்நிலையில் சென்னையிலிருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல கோவை, மதுரை, நெல்லை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களிலிருந்து வரும் 12ம் தேதி 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெளிமாநிலங்களான பெங்களூரிலிருந்து 400 பேருந்துகளும் இயக்கப்படும் மொத்தமாக 1,100 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க முடியும்.

இது தவிர 15ம் தேதி மக்கள் மீண்டும் ஊர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க பேருந்து நிலையத்தில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+