கேசுவலாக ஜீன்ஸில் அமைச்சர் பதவியேற்க வந்த டி.ஆர்.பி.ராஜா! கண்டும் காணாதது போல் நின்ற சேகர்பாபு!
சென்னை: அமைச்சர் பதவி ஏற்பதற்காக ஆளுநர் மாளிகை வந்த டி.ஆர்.பி. ராஜா வழக்கம் போல் கேசுவலாக ஜீன்ஸ் அணிந்திருந்தார்.
பொதுவாக அமைச்சராக பதவியேற்பவர் பதவியேற்கும் விழாவுக்கு கட்சி கரைவேட்டி கட்டி வருவது திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளிலும் வழக்கமான நடைமுறையாகும்.
இதனிடையே அது போன்ற ஃபார்மாலிட்டிகளை எல்லாம் பிரேக் செய்து எப்போதும் எப்படியோ அப்படியே இன்றும் என்கிற வகையில் பதவியேற்க வந்திருந்தார் டி.ஆர்.பி.ராஜா.

சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினும், ஜீன்ஸ் பேண்ட் ஒயிட் ஷர்ட் என கேசுவல் ஆடையில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
இப்போது டி.ஆர்.பி.ராஜாவும் அதே போன்று வழிமுறையை கடைபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு காவல்துறையினர், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வணக்கம் வைத்து வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சரை உள்ளே அழைத்து செல்வதற்காக காத்திருந்த அமைச்சர் சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜாவை பார்த்தும் பார்க்காதது போல் ஒதுங்கி நின்றதற்கான காரணம் தெரியவில்லை.

டி.ஆர்.பி.ராஜா தான் ஜீன்ஸில் பதவியேற்க வந்தார் என்றால் பதவியேற்கும் விழாவுக்கு பார்வையாளராக வந்திருந்த டி.ஆர்.பாலுவும் கட்சி கரைவேட்டியை தவிர்த்து பேண்ட் சட்டை அணிந்து வந்திருந்தார்.
கருணாநிதி காலத்தில் இது போன்ற நிகழ்வுகளில் பரிதி இளம் வழுதியை தவிர மற்ற யாருக்கும் கட்சி வேட்டி கட்டுவதிலிருந்து விதிவிலக்கே கொடுக்கமாட்டார் என்பது திரும்பிபார்க்கத்தக்கது.












Click it and Unblock the Notifications