அமமுகவில் இனி ''மாணவர் அணி'' ''மாணவியர் அணி''! தமிழ்நாட்டில் முதல்முறை! டிடிவி தினகரன் புது முயற்சி!
சென்னை: தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் ''மாணவியர் அணி'' என்ற புதிய சார்பு அணியை அமமுகவில் உருவாக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி என்று தான் சார்பு அணிகளை கேள்விபட்டிருப்போம். முதல்முறையாக மாணவர் அணி என்ற சார்பு அணியை அமமுகவில் தான் பார்க்கிறோம். இதனிடையே தனது புது முயற்சி குறித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''உலகெங்கும் புரட்சியையும், எழுச்சியையும் செயல்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய சக்தியாகவும், சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களாகவும், தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களும் மாணவர்களே!

அத்தகைய வருங்கால சமூகமான மாணவர்களின் மத்தியில் தூய்மையான புரட்சிகர அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் "கழக மாணவர் அணி" மற்றும் "கழக மாணவியர் அணி" என இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது.
கழக மாணவர் அணி செயலாளராக
வழக்கறிஞர் திரு.A.நல்லதுரை அவர்களும்
(கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்)
கழக மாணவியர் அணி செயலாளராக திருமதி.B.ஜீவிதா நாச்சியார்அவர்களும்
(கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர்)
இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை, கழக மாணவர் அணி செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.பரணீஸ்வரன் அவர்களும், கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.A.நல்லதுரை அவர்களும், கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.B,ஜீவிதா நாச்சியார் அவர்களும் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.''












Click it and Unblock the Notifications