“இன்னும் டைம் இருக்கு..” தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் பிப்ரவரி 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கடந்த 6 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருப்ப மனுக்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளன்றே ஆயிரக்கணக்கான தவெகவினர் பனையூர் அலுவலகத்தில் குவிந்தனர். பனையூர் அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் வந்ததால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக தலைமை அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என தவெக தலைமை அறிவித்தது. ஆன்லைனில் விருப்ப மனுவை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து, பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு கொரியர், தபால் அல்லது நேரில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் அறிவித்துள்ளார். இன்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் பிப்ரவரி 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, வரும் 20 ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications