திருப்பதி - காட்பாடி இடையே “ஜாக்பாட்”.. 104 கி.மீ இரட்டை ரயில் பாதை.. பச்சைக்கொடி காட்டிய கேபினட்!
சென்னை: காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே 104 கி.மீ தொலைவுக்கு இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ரூபாய் 1,332 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் மூலம், சுமார் 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான இணைப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரட்டை ரயில் பாதை திட்டம் இது திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி சிவன் கோயில், காணிபாக்கம் விநாயகர் கோயில், சந்திரகிரி கோட்டை ஆகியவற்றை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ரூ. 1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ தொலைவிலான ஒற்றை ரயில் வழிப்பாதையானது, இரட்டை வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
கடந்த வாரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது திருப்பதி - காட்பாடி இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே, திருப்பதி - காட்பாடி இடையேயான ஒற்றை ரயில் பாதையை ரூ. 1,332 கோடியில் இரட்டை வழிப்பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலம், இந்திய ரயில்வேயின் பாதை 113 கி.மீ அதிகரிக்கும். 400 கிராமங்களைச் சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இருவழிப் பாதை அமைக்கப்பட்டால் நிலக்கரி, விவசாயப் பொருள்கள், சிமெண்ட் என ஆண்டுக்கு 40 லட்சம் டன் சரக்குகள் கூடுதலாக கையாள முடியும்.
வேலூர் மற்றும் திருப்பதியின் கல்வி மற்றும் மருத்துவ மையங்களுடன் இணைப்பை மேம்படுத்துவதே இந்த புதிய திட்டத்தின் நோக்கம். இந்த இரட்டை ரயில் பாதை திட்டத்தில் ஆந்திரா (சித்தூர், திருப்பதி) வழியாக தமிழகத்திற்கு (வேலூர்) செல்லும் ரயில் பாதையில் 15 நிலையங்கள், 17 பெரிய பாலங்கள், 327 சிறிய பாலங்கள், 7 சாலை மேம்பாலம் , 30 சாலை கீழ் பாலம் ஆகியவை உள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications