பாஞ்சாகுளம் விவகாரம்..பள்ளிகளில் சாதிய பாகுபாடு..நடவடிக்கை பாயும்..அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்
சென்னை: பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது சாதியை சொல்லி ஒரு பிரிவினர் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டியலின மக்களை தக்கியதாக 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் போடப்பட்டதாக தெரிகிறது.

பெட்டிக்கடையில் தீண்டாமை
பாஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு பள்ளிக்கூட மாணவர்கள் தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வாங்க சென்றனர். அப்போது அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுத்த மகேஸ்வரன், அதனை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.

2 பேர் கைது
இது சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் கடை உரிமையாளர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்தப் பிரிவின் படி நடவடிக்கை எடுத்தால் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ ஊர்க்குள் வர அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் உபயோகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஏஓ விடுவிப்பு
அதேபோல், பாஞ்சாங்குளம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா என்பவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், பாஞ்சாங்குளம் கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே பள்ளியில் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இப்பள்ளியில் 23 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் கூறியதைப் போன்று எந்த வித சாதிய பாகுபாடும் பார்க்கவில்லை எனவும், பள்ளியின் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாகவே நடத்தி வருகின்றனர் எனவும், பள்ளியை ஆய்வு செய்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதனிடையே சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தென் மாவட்டங்களில் கல்வியறிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications