Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திராவிடன்" என்று சொன்ன ஆளுநர்..ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று கொந்தளிக்கும் திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள் என்று சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

வேலூர் சிப்பாய் எழுச்சி தினத்தில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றார்கள். நேதாஜி ஐ. என். ஏ படைக்கு சிப்பாய்கள் வேண்டும் என்று சொன்னபோது முதலில் ஆதரவு கொடுத்தவர்கள் வேலூர் வீரர்கள் தான்'' என்றார்.

தொடர்ந்து அது குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ''மதம், பொருளாதாரம், இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டார்கள். ஆங்கிலேயர் நம்மை ஆள்வதற்கு முன்னர் பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள் .

 ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

அப்பொழுது மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் சென்று வந்தார்கள் . வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை . இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தான் இருந்தோம் என்றார்.

பிரித்தாளும் சூழ்ச்சி

பிரித்தாளும் சூழ்ச்சி

அவர் மேலும், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறோம். ஆங்கிலேயர்கள் தான் நம்மிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்று நோக்கி பார்த்தால் தெரியும்.

திராவிடர்கள்

திராவிடர்கள்

விந்திய மலையை அடிப்படையாக வைத்து தான் நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் தான் 'திராவிடன்' என்ற வார்த்தையில் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்'' என்று சொன்னார்.

சர்ச்சையை கிளப்பிய கருத்து

சர்ச்சையை கிளப்பிய கருத்து

திராவிடன் என்கிற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டது ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 திமுகவின் டி.ஆர்.பாலு

திமுகவின் டி.ஆர்.பாலு

தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் ரவியை போல் சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என திமுகவின் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். கவர்னர், கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம் கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் டி.ஆர். பாலு.

திருமாவளவன்

திருமாவளவன்

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ''திராவிடன் என்பது நிலம்வழி சார்ந்தது என்றால், ஆரியன் என்பதுவும் நிலவியல் சார்ந்த இனப்பிரிவு தானா? மரபினம் இல்லையா? ஆரியரான ஹிட்லரும் அதேபோல நிலம் சார்ந்த அடையாளத்தைக் கொண்டவர்தானா? ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அக்மார்க் தயாரிப்பு தான் ஆர்.என்.ரவி என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+