பெண் தலைவரை இப்படியா பேசுவது? மன்னிப்பு கேளுங்க.. ரூ 2 கோடி கேட்டு சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
சென்னை: நான் தமிழர் இல்லை என என் மீது அவதூறு பரப்பியதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என சீமானுக்கு தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவி வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அவர் புகார் கூறிய நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை தலைவி வீரலட்சுமி செயல்பட்டார். இந்த நிலையில் சீமானை வீரலட்சுமி பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் சேர்ந்து கூட சமூகவலைதளங்களில் சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு இடையே கூட சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி தனது புகாரை கடந்த 16ஆம் தேதி இரவோடு இரவாக வாபஸ் வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனால் மகிழ்ச்சிதான் என்றும் அவர்கள் சமாதானம் ஆனதற்கு கோயிலுக்கு சென்று 1000 பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்றும் வீரலட்சுமி தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டிவந்தால் நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்றும் சீமானுக்கு சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து வீரலட்சுமி மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சீமான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தன் மீது அவதூறு பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் ரூ 2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications