போதையில் வாகனம் ஓட்டிவிட்டு ஃபைன் கட்டலையா..வாகனங்கள் கோர்ட் மூலம் பறிமுதல்..காவல்துறை எச்சரிக்கை
போதையில் வாகனம் ஓட்டிவிட்டு ஃபைன் கட்டாமல் சென்றால் வாகனங்கள் கோர்ட் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை: வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், ரூ.10,000 அபராத தொகை கட்ட வேண்டும் என்ற விதி தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் உள்ளது. விபத்துக்களுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது.. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது..சிக்னல் ஜம்பிங் செய்வது என வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தினசரி சாலையில் காண முடிகிறது.

போக்குவரத்து விதிமீறல்
அதுவும் தலைநகர் சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுவதை காண முடியும். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி விபத்தில்லா நகரமாக சென்னையை மாற்றவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் விதிகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களிடம் அபராதம் தொகை விதிக்கின்றனர்.

பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம்
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத தொகையால் தற்போது வாகன ஓட்டிகள் பலரும் ஹெல்மெட் அணிந்து செல்வது அதிகரித்துள்ளது.

அபராதம் கட்டாமல் கிடப்பில் போடுவதாக
இருந்தாலும் போக்குவரத்து விதி மீறல்கள் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இ செல்லானும் கொடுக்கப்படுகிறது. ஆனால் பல வாகன ஓட்டிகளும் இ செல்லானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டினால்..
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:-சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து காவலர்கள் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும்
மேலும், போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10,000 அபராத தொகை கட்ட வேண்டும் என்ற விதி தற்போது கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications