வெப்பச்சலனம்...5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் ஜில் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் 7ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையின் மீது நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. செஞ்சியில் 7 செமீ மழையும் வானூரில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காட்பாடியில் 4 செமீ மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

இடி மின்னல் மழை

இடி மின்னல் மழை

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கையின் மீது நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் மழை

10 மாவட்டங்களில் மழை

அதேபோல் நாளை சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கனமழை

3 நாட்களுக்கு கனமழை

5, 6, 7ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி,தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய உள் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

பலத்த காற்று வீசும்

பலத்த காற்று வீசும்

இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதே போல மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+