ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரிக்கு வந்து உயிர் போயிருக்கும்.. நெரிசலில் சிக்கி கதறிய ரசிகர்கள்
சென்னை: மறக்குமா நெஞ்சம் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ ஏஆர் ரகுமான், அவரது ரசிகர்களால் மறக்கவே முடியாத நிகழ்வாகி விட்டது. கடும் போக்குவரத்து நெரிசல், கச்சேரி நடைபெறும் இடத்திலும் நெரிசலில் சிக்கி உயிர் பிழைத்தால் போதும் என்று கோபத்தோடும் கடும் மன உளைச்சலோடும் வீடு திரும்பியிருக்கின்றனர் ரசிகர்கள்.
சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசைக்கச்சேரியைக் காண ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து டிக்கெட்ட பெற்ற ரசிகர்கள் அதை அனுபவிக்க முடியாமல் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளனர்.
ஞாயிறு மாலை வீட்டை விட்டு கிளம்பிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இசையை ரசிக்க வந்த ரசிகர்கள் மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக கூறியுள்ளார்கள்.
@actcevents @arrahman and everybody else involved in #marakumanenjam and #ARRahman live. We need answers, accountability, refunds and much more. The organizing today was pathetic, and not only from an experience POV but dangers to health&safety. Videos attached, thread follows. pic.twitter.com/hf7fnyDVHc
— Nitin (@makhayanitini) September 10, 2023
சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஏஆர் ரகுமான் #ARRahman என்ற பெயர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பெண்கள் பலரும் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய தங்களின் உயிர் போயிருக்கும் என்பது போல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் டிராபிக் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரியை விவிஐபிக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்றும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய சாமானிய மக்கள் எப்படி சிரமப்படுகிறார்கள் என்றும் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் சென்னைவாசிகளுக்கு இன்றைய சண்டே மறக்கவே முடியாத ஞாயிறுக்கிழமை இரவாக மாறி விட்டது என்பதுதான் சோகம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications