கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான்
சென்னை: கரூர் நெரிசல் பலி வழக்கில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய், ஆஜராக மாட்டார் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இதில் முக்கியமானதுதான் கரூர் நெரிசல் பலி சம்பவம். இது தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகியிருந்தார். தற்போது மீண்டும் விசாரணைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடந்தது?
கரூர் வேலூச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றிருந்தார். அவரை பார்க்க மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதாலும், குறிப்பிட்ட நேரத்தை விட சில மணி நேரம் கழித்து தாமதமாக விஜய் வந்ததாலும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், விஜய்யின் செயல்பாடுகள் குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.
விசாரணைக்கு அழைப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பாஜக-அதிமுக தலைமையிலான கூட்டணி ஒருபுறம், திமுக தலைமையிலான கூட்டணி மற்றொரு புறம் என, களம் இரு துருவங்களாக பிரிந்திருக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இதில் எதிலும் சேரவில்லை. இப்படி இருக்கையில்தான் சிபிஐ விசாரணயை டைட் செய்தது. டெல்லியில் இரண்டு நாட்கள் விஜய் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக-அதிமுக தலைமையிலான கூட்டணியில் விஜய்யை இணைக்கவே, சிபிஐ விசாரணையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆஜராக மாட்டார்
இருப்பினும் இந்த விசாரணையில் விஜய் ஆஜராக மாட்டார் என்று தவெக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், நாளை முதல் தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ளதால் விஜய் ஆஜராக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆஜராவதிலிருந்து விலக்கு பெற வழக்கறிஞர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
என்ன காரணம்?
சமீபத்தில்தான் தவெக விருப்பமணு விநியோகம் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை தவெக வெளியிட உள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், தொழிலதிபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தவெக வேட்பாளர் நேர்காணல் நாளை முதல் நடைபெறுகிறது. எனவே விஜய் நாளை ஆஜராக மாட்டார் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.
-
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய்












Click it and Unblock the Notifications