கொரோனாவை காரணம் கூறி அதிகாரிகள் அத்துமீறினால்... தொடர் கடையடைப்பு... வணிகர் சங்கம் திட்டவட்டம்..!
சென்னை: கொரோனாவை காரணம் கூறி வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அத்துமீறினால் தொடர் கடையடைப்பு நடத்த வேண்டியது வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கடைகள், ஹோட்டல்கள், உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு விதித்த கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராயும் வகையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
இது ஒரு சில இடங்களில் அமைதியான முறையிலும், ஒரு சில இடங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்துக்கிறது. வியாபாரிகளிடம் காவல்துறையினரும், அதிகாரிகளும் கறார் காட்டுவது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு புகார்கள் குவிந்து வந்தன.
இந்நிலையில் அந்த பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் வியாபாரிகள் அளித்த புகார்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கொரோனா ஆய்வு என்ற பெயரில் 10 முதல் 15 நபர்கள் வரை திடுதிப்பென வணிக நிறுவனங்களுக்குள் நுழைவதாகவும் மனம் போன போக்கில் வணிகர்களிடம் அபராதம் வசூல் செய்வதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஒரு சில அதிகாரிகள் சாவியை அடாவடியாக பிடுங்கிச் செல்லும் நிகழ்வுகளும் நடப்பதாக முறையிடப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், கொரோனாவை காரணம் கூறி வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் இனி அத்துமீறினால் தொடர் கடையடைப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது என்றும், சட்டத்திற்கு புறம்பான முறையில் கொரோனா ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் நடந்துகொண்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications