வில்லிவாக்கத்தில் போட்டி! சவாலான பணிதான்.. தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்காக களமிறங்கிய கார்த்திக் மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லிவாக்கத்தில் வேட்பாளராக களமிறங்கியது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு திமுகவின் கார்த்திக் மோகன் பேட்டியளித்திருக்கிறார். அதில், தலைமை சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இந்த தொகுதியில் களமிறங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் திமுக தலைமை வழங்கியபோது அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், மகிழ்ச்சியுடனும் ஒரு சவால்களையும் ஏற்றுக்கொண்டு பணிகளை தொடங்கியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Villivakkam

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கிறார். எனவே இது நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, செய்தி ஊடகம் ஒன்றுக்கு திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனது தந்தை தேர்தலில் போட்டியிட்ட காலத்திலிருந்தே அவருடன் அரசியல் களத்தில் பயணித்த அனுபவம் எனக்கு உண்டு. அன்று வேட்பாளருடன் இருந்த நான், இன்று வேட்பாளராகவே களம் காண்கிறேன். திமுக ஐடி விங்கின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றியது ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி அபரிமிதமானது என்பதால், அந்த அனுபவம் தற்போதைய களப்பணிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கட்சியின் தலைவருக்காகவும், கொள்கைக்காகவும் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன். மக்களிடம் எளிமையாகப் பழக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

மக்களை எளிதாக அணுகுவதற்காக வாகனங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் நடந்தே சென்று மக்களைச் சந்திக்கிறேன். இது மக்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் நேரம் மட்டுமே ஒரு தடையாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+