பேரறிவாளன் விடுதலை: தீர்ப்பு நகலில் 25வது பக்கத்தில் 29ஆவது பாயிண்ட்.. ஆளுநருக்கு நீதிபதிகள் சுளீர்
சென்னை: 142 சட்டவிதிப்படி பேரறிவாளனை விடுவித்தது ஏன் என்பது குறித்து தீர்ப்பு நகலில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போட்ட நிலையில் பேரறிவாளன் தனது வழக்கில் வென்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து 29 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் இன்று வெளியானது. அந்த நகலில் வாய்மொழியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை விட ஆளுநரின் அதிகாரங்களையும் மெத்தனப்போக்கையும் சம்மட்டியால் அடித்தது போல் கூறியிருக்கிறார்கள்.

161 சட்ட விதி
அதில் முக்கியமானது பிரிவு 161 இன் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதுடன் அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குள்பட்டவர். 161 பிரிவின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தாமை அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணம் சொல்லப்படாத தாமதத்தை செய்யும் போது அது நீதித் துறையின் மறுஆய்வுக்கு உள்பட்டது.

மாநில அமைச்சரவை
அதிலும் குறிப்பாக மாநில அமைச்சரவை குற்றம்சாட்டப்பட்ட சிறை கைதியை விடுவிப்பதற்கான முடிவை எடுத்து அதை ஆளுநருக்கு பரிந்துரைத்து அவரை விடுதலை செய்ய கூறிய போதிலும் இது போன்ற காலதாமதங்களை ஏற்க முடியாது.

பேரறிவாளன்
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழகஅரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் தாமதம் செய்து குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது. ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்.

31 ஆண்டுகால சிறைவாசம்
மனுதாரரின் 31 ஆண்டு கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டும் பரோலின் போது அவருக்கு சிறைத் துறை கொடுத்த நற்சான்றையும் கருத்தில் கொள்கிறோம். மேலும் 19 வயதில் சிறைக்கு சென்ற மனுதாரர், இத்தனை காலம் சிறையில் இருந்தபடியே பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

142 சட்டவிதி ஏன்?
இரண்டரை ஆண்டுகளாக 161 இன் கீழ் ஆளுநர் மனுதாரரின் விடுதலையை காலம்தாழ்த்துகிறார் என்றால் இந்த வழக்கை மீண்டும் ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பினால் சரியாக இருக்கும் என நாங்கள் கருதவில்லை. எனவே சட்டவிதி எண் 142 இன் கீழ் மனுதாரரை விடுதலை செய்கிறோம். அவரது ஜாமீனை ரத்து செய்கிறோம் என அந்த நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications