இறக்கும் தருவாயில் கூட பிஜிலி ரமேஷ் செய்த காரியம்! நிறைவேறாத ஆசையுடன் பிரிந்தது உயிர்!
சென்னை: எல்லாரையும் சிரிக்க வைத்துவிட்டு இன்று அழ வைத்த காமெடியன் பிஜிலி ரமேஷ் இறக்கும் தருவாயில் கூட அவர் செய்த ஒரு ஆக்ஷன் இருக்கே, கண்களில் நீர் வழிகிறது! அந்தளவுக்கு அவர் மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார். அவரது கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இதுகுறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எப்போது வேண்டுமானாலும் நிற்கும் குதிரை என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். நான் உயிர் பிழைக்க முடியாது. ஆனால் நான் இறப்பதற்குள் ரூ 10 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தால் அதை வைத்து வங்கியில் டெபாசிட் செய்தோ இல்லை லீஸுக்கு வீடு எடுத்தோ அவர்கள் வாடகை செலவில்லாமல் பிழைப்பார்கள்.

என் மகனை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு இருக்கிறது. ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை. நடக்கவே முடியவில்லை. வயிற்றிலிருந்து திரவம் கசிகிறது. அதனால் தண்ணீரும் அதிகமாக குடிக்க முடியாது.
இப்போது கூட நான் ஷூட்டிங்கிற்கு கூப்பிட்டால் போக ரெடியாக இருக்கிறேன். ஆனால் "பிஜிலிக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கிறது. அவரை அழைக்க வேண்டாம்" என சொல்லும் கூட்டம் இருக்கிறது. ஒருத்தரை பின்னால் இழுத்துத்தான் மற்றவர்கள் முன்னேறுவர்.அப்படிப்பட்ட காலம் இது.
எனக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. லால் சலாமில் கிடைக்கும் என்றார்கள், ஆனால் அதை கூட யாரோ தட்டி பறித்துவிட்டார்கள். இவ்வாறு கூறிய பிஜிலி ரமேஷ் கடைசியாக பேட்டியின் முடிவில் பாபா முத்திரையை காண்பித்தார். அந்த அளவுக்கு பிஜிலி ரமேஷ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார்.
நடக்க முடியாமல் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 9 மாதங்களாக பிஜிலி ரமேஷ் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், நண்பர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க வீடியோ மூலமாக பிரபலமடைந்தவர் ரமேஷ். இவர் ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அது போல் கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications