மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக்டர்கள் விளக்கம்
சென்னை: பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, பரவும் வதந்திகள் குறித்து எஸ்.பி.பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மேலும், எஸ்பிபி உடல்நிலையில் கடைசியில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பது குறித்து, மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

திடீர் மரணம்
பாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததும், அதையடுத்து அவர் மரணமடைந்த தகவலும், ரசிகர்களை உலுக்கின.

பில் தொகை
இதனிடையே, நிலுவை பில் தொகையை கொடுத்தால்தான், பாலசுப்பிரமணியம் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என எம்ஜிஎம் மருத்துவமனை கூறியதாகவும், துணை குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியம் மகன் சரண் உதவி கோரியதாகவும், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

சரண் விளக்கம்
இந்த சர்ச்சைகளுக்கு இன்று சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். மேலும், மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தார்.
இந்த பேட்டியின்போது, சிகிச்சையின் கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பது குறித்து, சரணுடன் இணைந்து எம்ஜிஎம் மருத்துவமனை டாக்டர்கள் பேட்டியளித்தனர்.

கடைசி நிமிடங்கள்
அப்போது அவர்கள் கூறுகையில், எஸ்பிபி மரணத்திற்கு 48 மணி நேரம் முன்பிருந்து அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. எஸ்பிபி மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவருக்கு கடைசி 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கவில்லை. எனவே, அவருக்கு மூச்சு திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications