சரவெடி கொளுத்த ரெடியாகும் முதல்வர் ஸ்டாலின்! ஆளுநர் vs அரசு.. சுப்ரீம் கோர்ட் அதிரடியால் உற்சாகம்!
சென்னை: "மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் வகையிலும், இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் 'Speaking 4 India' என்ற தலைப்பில் ஆடியோ சீரிஸ் வெளியிட்டு வருகிறார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் பேசிய முதல் பாட்காஸ்ட் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது. அதில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காயப் பார்க்கிறது என விமர்சித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேசுகிறார்: செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோடில், சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பாஜகவின் ஏழு மெகா ஊழல்களைப் பற்றிப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அக்டோபர் 31ஆம் தேதி வெளியான மூன்றாவது எபிசோடில், மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்தும், 5 மாநில வாக்காளப் பெருமக்களுக்குக் கோரிக்கை விடுத்தும் பேசி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் 'இந்தியாவுக்கான குரல்' பாட்காஸ்ட் சீரிஸின் நான்காவது எபிசோட் விரைவில் வெளியாக உள்ளது. இதில் எந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி ஸ்டாலின் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த எபிசோடில் தான் பேசப்போகும் விஷயம் பற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்த எபிசோடில் பேசும் விஷயம்: முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், "மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" - மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்.." எனக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வெளியிட்டுள்ள பதிவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு புரியவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்குவது, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது, மசோதாக்களை நிராகரித்தால் அவற்றை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துக்கே உண்மையான அதிகாரம் உள்ளது. ஆளுநர் என்பவர் அடையாள தலைவர் மட்டுமே. தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவரான ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங்களால் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தடுக்க ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என தெளிவாகக் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
பஞ்சாப் ஆளுநர் தொடர்புடைய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, தமிழக ஆளுநர் vs மாநில அரசு தொடர்புடைய வழக்கிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடியாக அமையலாம் என்ற பேச்சுகள் உள்ள சூழலில், தனது அடுத்த பாட்காஸ்ட் எபிஸோடில், மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு பற்றி பேசுவதாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications