இது உள்கட்சி விவகாரம் தானே.. ஓபிஎஸ், இபிஎஸ்ஸை பாஜக தலைவர்கள் சந்தித்தது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பாஜக மேலிட தலைவர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்ததை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்விகள் எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. இந்த கூட்டத்தில் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரத்துக்கு தொடக்கம் முதலே ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதில் உறுதியாக உள்ள ஓ பன்னீர்செல்வம் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிப்பு
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான எம்பி சிவி சண்முகம் கூறினார். மேலும் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்க்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்துடன் இந்த தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என எம்பி சிவி சண்முகம் பேசினார்.

வெளியேறிய ஓபிஎஸ்
மேலும் ஜூலை 11ம் தேதி உண்மையான பொதுக்குழு நடக்கும் அன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அவைத்தலைவர் அறிவித்தார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் காகிதம் வீசப்பட்டது.

பாஜக தலைவர்கள் சந்திப்பு
இதையடுத்து தான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர். இதேபோல் அவர்கள் இருவரும் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தனர். இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பிரச்சனை குறித்து பாஜக தலைவர்கள் சமாதானம் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

ஜெயக்குமார் விளக்கம்
இது ஒருபுறம் இருக்க ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு வழங்ககோரியதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து அதிமுக, பாஜக தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆயினும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தான் சந்திப்பு நடந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜோதிமணி எம்பி விமர்சனம்
இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடனான பாஜக தலைவர்கள் சந்திப்பை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அதிமுக பொதுக்குழு முடிந்ததும் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா?'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா என அவர் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications