நள்ளிரவில் நாய்கள் குரைப்பது ஏன் தெரியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! புது தகவல்
சென்னை: பகலில் எந்த வம்புக்கும் போகாமல் கிடக்கும் நாய்கள் கூட இரவு நேரத்தில் சொல்லி வைத்தாற் போல் வண்டிகள், வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை மறித்து குரைத்து மிரட்டி விட்டுவிடும். ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் இப்படி என்றால், யாருமே இல்லாத நேரத்தில் கூட திடீரென நாய்கள் ஊளையிடுவதையும், குரைப்பதையும் கிட்டத்தட்ட அனைவருமே கவனித்து இருப்போம். அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்.
இரவு நேரங்களில் நடந்தோ, பைக்குகளிலோ சென்றால் சில சமயம் தெரு நாய்கள் பீதியை கிளப்பிவிடும். பின்னாலேயே துரத்துவது.. கடிப்பது போல வருவது.. என வாகன ஓட்டிகளை நடு நடுங்க வைத்துவிடுகிறது. நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நாய்களும் சொல்லி வைத்தாற்போல இரவு வந்துவிட்டால், தனது சுபாவத்தையே மாற்றிவிடும்.

பகலில் எந்த வம்புக்கும் போகாமல் கிடக்கும் நாய்கள் கூட இரவில், கிராஸ் செய்பவர்களை மிரள வைத்துவிடும். ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் இப்படி என்றால், யாருமே இல்லாத நள்ளிரவில் திடீரென நாய்கள் ஊளையிடுவதையும், குரைப்பதையும் கிட்டத்தட்ட அனைவருமே கவனித்து இருப்போம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீரென இப்படி நாய்கள் குரைப்பது, தூக்கத்தையும் கெடுத்துவிடும்.
தெருவில் எதுவும் ஆள்நடமாட்டம் இருக்குமோ என பார்த்தால் ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. ஆனால் நாய்கள் இஷ்டத்திற்கு அவ்வப்போது குரைப்பதும், ஊளையிடுவதுமாக பாடய்பாடுத்தி விடும். தெருநாய்கள் மட்டும் இல்லை. வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட இப்படி நள்ளிரவில் குரைத்துக் கொண்டு இருக்கும். தெருநாய்கள் குரைப்பதற்கு பல காரணங்களையும் சொல்கிறார்கள்... பல கட்டுக்கதைகளும் அடித்து விடப்படுவது வழக்கம்..
அதாவது நாய் குரைப்பது கெட்ட சகுணம் அல்லது மரணம் வருவதை முன்கூட்டியே அறிவிக்கிறது என்றெல்லாம் கூட சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தெருநாய்கள் இப்படி குரைப்பது ஏன்? என்பது பற்றிய சமீபத்திய ஆய்வு முடிவில் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தெருநாய்கள் தங்களது கூட்டத்தில் உள்ள பிற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக குரைக்கிறதாம்.. சில நேரங்களில் தொலைதூர இடங்களுக்கு சென்றுவிட்டால் பாதுகாப்பான இடத்தை கண்டறிவதற்காக இப்படி சத்தம் போட்டுக்கொண்டே இருக்குமாம்.. அது போக சுற்றியுள்ள நாய்களுடன் உரையாடிக்கொள்ளும் விதமாகவும் இப்படி குரைக்குமாம்..
* சில தெருக்களில் தெருநாய்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும். அதுமட்டும் இன்றி அங்கு இருக்கும் சூழலும் நாய்களுக்கு பிடிக்காத வகையில் இருந்தால் நாய்கள் இப்படி நள்ளிரவில் ஊளையிடுமாம். தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இப்படி கத்திக்கொண்டு இருக்குமாம்.
*அதுபோக இந்த எல்லை தன்னுடையது. வேறு நாய்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என எச்சரிக்கும் விதமாகவும் இப்படி குரைத்துகொண்டு இருக்குமாம்.. சுற்றுச்சூழலில் நடைபெறும் சின்ன மாற்றங்களை கூட எளிதில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் நாய்களுக்கு இயற்கையாகவே உள்ளது. இதனால், சுற்றுசூழலில் ஏற்படும் சத்தங்கள் அதாவது, சைரன், வாகனங்களின் ஹார்ன்ஸ், பட்டாசுகள், பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலிகள் ஆகியவை கூட நாய்கள் எரிச்சல் அடைந்து குரைப்பதற்கு வழிவகுக்கும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications