மூன்றே மாதங்களில் மக்களிடம் குறைந்த ரஜினிகாந்த் செல்வாக்கு.. காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமல் பிரமாண்ட வளர்ச்சி, ஸ்டாலினுக்கு அடுத்த இடம்- வீடியோ

    சென்னை: இந்தியா டுடே டிவி சேனல், ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், நடிகர் ரஜினிகாந்த் செல்வாக்கு மக்களிடையே குறைந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது.

    2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் முதல்வராக வரவேண்டும் என்று 8 சதவீத மக்கள் விரும்பினர்.

    அதேநேரம், இப்போது ஜனவரி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் செல்வாக்கு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கமல்ஹாசன் மக்கள் ஆதரவு

    கமல்ஹாசன் மக்கள் ஆதரவு

    அதாவது, கமல்ஹாசன் முதல்வராக வரவேண்டும் என்று 10 சதவீத மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று 43 சதவீத மக்கள் விரும்பும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில், கமல்ஹாசன் முன்னேறியுள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், உள்ளிட்டோருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    இதில் ரஜினிகாந்த் மட்டும் வித்தியாசம். அக்டோபரில் 6 சதவீதம் பேர் ரஜினிகாந்த் முதல்வராக விரும்பிய நிலையில் இப்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அவ்வாறு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். கட்சியை தொடங்காத நிலையில் ரஜினிகாந்தின் செல்வாக்கு ஏன் சரிவடைந்தது என்ற கேள்வி சாமானிய மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த மூன்று மாத கால கட்டங்களில் ரஜினிகாந்த் அளித்த சில பிரஸ்மீட்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    சர்ச்சை

    சர்ச்சை

    அதில் முக்கியமான ஒன்று, 'யார் அந்த 7 பேர்' என்பது. நவம்பர் மாதம், சென்னை ஏர்போர்ட்டில் பிரஸ் மீட் செய்தார் ரஜினிகாந்த். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு யார் அந்த ஏழு பேர் இன்று ரஜினிகாந்த் அளித்த பதில் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    மோடிக்கு ஆதரவு

    மோடிக்கு ஆதரவு

    இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் மறுநாளே மற்றொரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதிலும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார். மோடிக்கு எதிராக பல கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள சூழ்நிலையில் மோடிதான் பலசாலி என்பது தெளிவாகிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    கட்சி அறிவிப்பு

    கட்சி அறிவிப்பு

    இந்தியா டுடே, கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்து உள்ளது. ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், செல்வாக்கு குறைந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது இவரது செல்வாக்கையும் குறைந்து விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதேபோல 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி புதிதாக கட்சி, தொடங்க உள்ளதாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படங்களில் பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். இன்னும் கட்சியை துவங்கவில்லை.

    ஓராண்டு ஆன கட்சி அறிவிப்பு

    ஓராண்டு ஆன கட்சி அறிவிப்பு

    கடந்த டிசம்பர் மாதம் வரை காத்திருந்த பொதுவான மக்களும் கூட இப்போது அவரது பேச்சில் நம்பிக்கை அற்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். இதுவும் ரஜினிக்கு, மக்கள் செல்வாக்கு குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இன்னமும்கூட திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களால், ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் அரசியல் என்று வந்து விட்டால், அவரது பேட்டிகள் சாமானியர்களையும் கோபப்படுவதாக அமைந்துவிடுகிறது, அதைத்தான் இந்த கருத்துக் கணிப்பு தெளிவாக காட்டுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+