”536 மோட்டார்கள் தயார்” வடசென்னையில் மாலைக்குள் மழைநீர் அகற்றப்படும்.. அமைச்சர் கேஎன் நேரு!
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாலைக்குள் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 29ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது தண்ணீர் தேங்கிய பகுதிகளில், தற்போது தண்ணீர் தேங்காமல் வடிந்து வருகிறது. இருந்தும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கேஎன் நேரு ஆலோசனை
இதனிடையே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பருவமழை குறித்து சென்னை ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

வடசென்னையில் பணிகள் தீவிரம்
இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 20.55 செ.மீ சராசரி மழை பதிவாகியுள்ளது. 450 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ள நிலையில் 156 இடங்களில் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 19 முறிந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் அதிகம் தேங்கியுள்ள வட சென்னை பகுதிகளில் துரிதப்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

2 மடங்கு அதிக மழை
இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், 'தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்துள்ளோம். 20.55 செ.மீ மழை சென்னையில் பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது. புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது.

தயார் நிலையில் அரசு
திருவிக நகர் பகுதியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அளவுக்கு அதிகமான மழையே காரணம். மழைநீர் தொடர்ந்து வடிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 536 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ரயில்வே துறையிடம் அனுமதி கேட்டு விரைந்து மழை நீர் வெளியேற்றப்படும். 169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளது.

மாலைக்குள் வெளியேற்றம்
மழை நீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் மழைநீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண காசோலை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 வார்டுகளிலும் வரும் நவ.5 ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications