இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: இன்ப்ளூயன்சா காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ப்ளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தட்பவெப்பநிலை காரணமாக ஜூன் மாதம் இந்த காய்ச்சல் தொடங்கும்.
தற்போது தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர் இடையே இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. முக்கியமாக 1-5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் இந்த காய்ச்சல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல்
இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த 12 நாட்களாக பள்ளி செல்லும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 25ம் தேதி வரை அங்கு பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும்.

தமிழ்நாடு
சுற்றுசூழல் சுத்தமாக இல்லாமல் இருப்பது, குளிர் பானங்கள் சாப்பிடுவது ஆகியவை காய்ச்சலுக்கு வழிவகுத்து பின்னர் இன்புளுயன்சா காய்ச்சல் ஏற்படவும் காரணமாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பரவுகிறது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

பள்ளிக்கு
இந்த நிலையில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த விவகாரத்தில் கூட்டு முடிவு எடுத்து வருகிறோம். முதல்வர் அலுவலகத்தில் இருந்தும், சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்தும் ஆலோசனைகள் செய்யப்படும். இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள். வல்லுனர்கள் அமர்ந்து பேசி இதில் முடிவு எடுப்பார்கள். மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம், அவர்கள் ஒன்றாக படிக்கலாம், இவ்வளவு இடைவெளிவிட்டு அவர்கள் அமரலாம் என சுகாதாரத்துறை சார்பாக எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஆலோசனை
அந்த ஆலோசனைகளை கேட்டு, அதை பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்றபடி நாங்கள் செயல்படுத்துவோம். கடந்த காலங்களில் இப்படித்தான் செய்யப்பட்டு வந்தது. நோய் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை சார்பாக ஆலோசனைகள் வழங்கப்படும். இப்போது முதல்வர் அலுவலகம் - சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து வரக்கூடிய அறிவுரைகள் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications