பிரதமர் மோடியின் போஸ்டரில் சாணி அடித்த பெண்.. சிசிடிவி கேமராவில் பதிவு.. பாஜக போராட்டம்-பரபரப்பு
சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரில் பெண் ஒருவர் சாணி அடித்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பிரதம் நரேந்திர மோடி கடந்த 17 ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் பாஜகவினர் கொண்டாடினர்.
தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னையில் பாஜக போஸ்டர்
இதேபோல் சென்னையில் பல இடங்களில் பாஜகவினர் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தனர். இதற்கிடையே மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை தாம்பரம் நகர பாஜக தலைவர் கணேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

போஸ்டரில் சாணி அடிப்பு
இந்த நிகழ்ச்சிக்காக முல்லை நகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்களின் படங்களுடன் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சுவர்களிடம் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் முல்லை நகர் பிரதான சாலையில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்கள் இருந்த போஸ்டரில் சாணி அடிக்கப்பட்டு இருந்தது.

பாஜகவினர் சாலைமறியல்
இதனை பார்த்து பாஜகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து பாஜக கட்சியினர் தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் திரண்டு வந்து மறியலில் ஈடபட்டனர். சாணி அடித்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போஸ்டரில் சாணி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

சிசிடிவியில் பதிவான பெண்
இதையடுத்து பாஜகவினர் மறியலை கைவிட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இதுதொடர்பாக அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமரக்காள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் சாணி அடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தின வருகின்றனர்..
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications