அன்பு பரிசு கேட்ட காதலி.. சென்னையில் பட்டப்பகலில் காதலன் பார்த்த வேலை.. கடைசியில் கம்பி எண்ணும் ஜோடி
சென்னை: சென்னையில் காதலர் தினத்திற்கு பரிசு கேட்ட காதலிக்காக சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம், பைக்கில் சென்ற இளம்பெண் ஒருவர் செல்போன் பறித்துள்ளார். இத்தனைக்கும் இந்த செல்போன் பறிப்பின் போது காதல் ஜோடி ஒன்றாக பைக்கில் சென்றுள்ளனர். சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரங்களை இங்கே காண்போம்.
காதலி ஆசைப்பட்டு கேட்டால் தட்டாமல் பரிசுப் பொருளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என்று இளைஞர்கள் கிஃப்ட் கொடுப்பதை பல சினிமாக்களிலும், ஏன் நிஜத்திலும் கூட பார்த்து இருக்கலாம். அப்படியான ஒரு சம்பவம்தான் சென்னையில் நடைபெற்றுள்ளது.

ஆனால், காதலி செல்போன் பரிசு பொருள் கேட்டதற்காக அதை வாங்கி கொடுக்க நினைக்காத காதலன், சாலையில் நடந்து சென்ற மற்றொரு பெண்ணிடம் பறித்து அதை கிஃப்டாக கொடுத்து இருக்கிறார். சென்னையில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் குறித்த செய்தியை விரிவாக காண்போம்.
சென்னை மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலை பகுதியை சேர்ந்தவர் ஆஷா பேம் (வயது 24 ). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலைக்கு போவதற்காக சாலையில் தனியாக நடந்து சென்றார். செல்போன் பேசிக்கொண்டே சென்று கோண்டிருந்த ஆஷா பேகமின் அருகே பைக் வரும் சத்தம் கேட்டது.
சாலையின் ஓரத்தில் செல்போனில் பேசியபடியே ஆஷா பேகம் சென்று கொண்டிருந்ததால், அந்த வழியாக வந்த காதல் ஜோடி ஒன்று இவரது செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் பறித்து சென்றது. ஆஷா பேகம் ஆப்பிள் ஐபோன் வைத்து இருந்த நிலையில் அதை செல்போன் பறிப்பு ஜோடி பறித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் குமரன் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து செல்போன் பறித்து சென்ற ஜோடியை அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கைதான இருவரும் காதல் ஜோடி என தெரியவந்தது.
19-வயதான சூர்யா என்ற இளைஞரும் 20 வயதான சுஜித்ரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்து இருக்கிறார்கள். காதலர் தினம் வருவதால் தனக்கு அன்பு பரிசு தருமாறு காதலி கேட்டு இருக்கிறார். இதனால் காதலிக்கு ஏதாவது விலையுர்ந்த கிஃப்ட் கொடுத்து அசத்த வேண்டும் என நினைத்துள்ளார் சூர்யா. ஆனால் இவர் தேர்வு செய்த பாதைதான் கடைசியில் கம்பி எண்ண வைத்துள்ளது.
காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆஷா பேமினின் செல்போனை பறித்து காதலர் தின பரிசாக கொடுத்துள்ளார் சூர்யா. இதில் இளைஞர் சூர்யா மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறு வயதில் இருந்தே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். காதலிக்கு பரிசு அளிக்க செல்போன் பறித்த காதலனுடன் சேர்ந்து தற்போது காதலியும் சிறையில் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications