இளைஞரின் பேக்கில் இருந்த பொருளால் அதிர்ந்துபோன பாதுகாப்பு அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞரின் கைப்பையில் இருந்த பொருளால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்ல இருந்த, பீகாரை சேர்ந்த விஷால் சிங் என்ற எம்.பி.ஏ மாணவரின் கைப்பையில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து அந்த மாணவரின் பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.ஏ மாணவர் எதற்காக தனது கைப்பையில் துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தார் என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications