ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை... மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியை பதவி விலக கோரும் காங்கிரஸ்..!
சென்னை: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியின் காரை மறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆவேச முழக்கங்கள் எழுப்பினர்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இனியும் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என ஸ்மிரிதி ராணியிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உ.பி.யில் ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு நேற்று முன் தினம் நிகழ்ந்த அவமரியாதையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கார் மறிப்பு
ஹத்ராஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக கூறி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணியை காங்கிரஸ் கட்சியினர் மறித்தனர். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

காங்.வலியுறுத்தல்
இதனிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி ராணியை, உடனடியாக அந்தப்பதவியில் இருந்து விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு போராட்டக்காரர்களை அழைத்துப் பேசிய ஸ்மிரிதி ராணி ஹத்ராஸ் வழக்கில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குண்டுகட்டாக
ஆனால் அதனை செவிமடுக்காத இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்மிரிதி ராணி காருக்கு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்ற காவல்துறையினர், மத்திய அமைச்சர் வாகனத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அப்போது மிகவும் ஆவேசப்பட்டவர்களாக குரல் எழுப்பிய அவர்கள், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என உரத்த குரல் எழுப்பினர்.

பரபரப்பு
இதனால் வாரனாசியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், ஸ்மிரிதி ராணியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகக்கோரியும் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் உ.பி.யில் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications