கொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க
கொச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே, புது ஐடியா உடன் வந்துள்ளன கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள டாக்ஸி ஓட்டுனர் அமைப்புகள்.
டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றை இயக்கும்போது, என்னதான் டிரைவர் மற்றும் பயணிகள் நடுவே இடைவெளி இருந்தாலும் கூட, தும்முவது, பேசுவது போன்றவற்றின் போது எச்சில் தெறித்து டிரைவர்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது.
அதே போல டிரைவர்களிடம் இருந்து பயணிகளுக்கும் எச்சில் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஒரு வேளை, இதில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அது பிறருக்கு பரவும் நிலை ஏற்படும்.

பைபர் எளிது
இதை தடுப்பதற்காக, பைபர் மூலம், டிரைவர் மற்றும் பயணிகளிடையே ஒரு தடுப்பு அமைக்கும் முடிவுக்கு, எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வந்துள்ளது. ஏற்கனவே, இது போன்ற வசதிகளுடன் டாக்சிகள் இயங்க தயாராகிவிட்டன. பைபர் சுவர் அமைப்பது என்பது எளிதான பணி தான் என்கிறது எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம்.

தொடக் கூடாது
மேலும், பயணிகள் கார் கதவை தொடுவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. டிரைவர் தான் கார் கதவை திறந்து பயணிகளை உள்ளே அனுப்புவார். இறங்கும்போதும், அவர்தான் திறந்து விடுவார். பண பரிமாற்றம் நேரடியாக இருக்காது. ஆன்லைன் மூலமாக பயணிகள், டிரைவருக்கு பணத்தை செலுத்த வேண்டும்.

கிருமி நாசினி
இதன் மூலம் உச்சபட்ச அளவுக்கு பாதுகாப்பு கடைபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பயணி அமர்ந்து சென்ற பிறகு ஒவ்வொரு பயணத்தின் பின்பும், கிருமி நாசினி கொண்டு கார் சுத்தம் செய்யப்படும். மேலும், காரில் ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.
Recommended Video

ஏசி கிடையாது
கார் ஜன்னல்கள் திறந்தபடி இருக்கும். பைபர் கண்ணாடி கிடைக்காதபட்சத்தில் பிளாஸ்டிக் சீட்டுகள் மூலமாக பயணிகள் மற்றும் டிரைவர்கள் இடையேயான பகுதி பிரிக்கப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டம் பசுமை மண்டலத்தில் உள்ளது. எனவே விரைவில் அங்கே டாக்சி சேவை மறுபடி துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் புது ஐடியா உடன் களமிறங்கியுள்ளனர் டாக்ஸி ஓட்டுனர்கள். வருங்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளிலும் இது போன்ற நடைமுறைகள், எல்லா இடமும் அமலுக்கு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications