கேரளாவில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி.. மெட்ரோ வாட்டர் தெரியும்.. இது என்ன?

Subscribe to Oneindia Tamil

கொச்சி: தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து திறந்து வைத்தார்.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் முக்கியமானது என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொச்சியில் துறைமுகமும் விமான நிலையமும் இருக்கிறது.

PM Narendra Modi to inaugurate Water Metro project today in Kerala

இந்த நிலையில்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து வாட்டர் மெட்ரோ திட்ட படகு சோதனை ஓட்டம் நடக்கிறது.

கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு நீதிமன்றம், வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகு இயக்கப்படவுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து சேவைக்காக 9 படகுகள் சோதனை ஓட்டம் முடிந்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரு 747 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.

இந்த படகில் குறைந்த கட்டணம் ரூ 20, அதிக கட்டணம் ரூ 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் உள்ளது போல் இந்த கப்பலில் கழிப்பிடம், குளிர்சாதன வசதி, உணவு உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. உயர்நீதிமன்ற சந்திப்பு மற்றும் வைபின் இடையே வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்குகிறது.

இந்த திட்டம் நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்து காற்று மாசையும் குறைக்கிறது. இந்த படகில் பயணம் செய்ய வாராந்திர பாஸுக்கு 180 ரூபாயும் மாதாந்திர பாஸுக்கு ரூ 600 கட்டணமும் 3 மாதங்களுக்கு ரூ 1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் பாதுகாப்பு அம்சமான சிசிடிவி கேமராவும் அதை செயல்படுத்த கட்டுப்பாட்டு மையமும் இருக்கிறது. உடல் ஊனமற்ற, வயதான பயணிகளின் வசதிக்காக மிதக்கும் படகு நிறுத்தங்கள் உள்ளன. சேஃப்டி ஜாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன. Kochi One செயலி மூலம் டிஜிட்டல் வழியாக படகில் பயணம் செய்ய கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் கேரளாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை வேளையில் சாலை பிரச்சாரத்திலும் அவர் கலந்து கொண்டார், பின்னர் பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டார். இன்றைய தினம் வாட்டர் மெட்ரோ திட்டம், வந்தே பாரத் ரயில், உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். முன்னதாக வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த அவருக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+