கிலோ கணக்கில் நகையை அள்ளிய களவாணிகள்.. கடைசியில் காத்திருந்த ஷாக்.. கோவை சம்பவம்
கோவை: கோவை அருகே நகைக்கடையில் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்து ஏமாந்த 2 திருடர்கள் போலீசாரிடம் சிக்கி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அல்ஷிபா. இவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்பிலான ஒரு கிராம் தங்க நகைகளான கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அதே நாளில் கேவை இடையர்பாளையத்திலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவை துடியலூர் இடையர்பாளைத்தை சேர்ந்தவர் கோபால்ராஜூ. கொங்கன் ரயில்வேயில் தலைமை பொறியாளராக உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியிடம் என்பதால் கடந்த மே மாதம் குடும்பத்துடன் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார்.

நகை கொள்ளை
இந்நிலையில் கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து கோபால்ராஜூ வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த இரு திருட்டு சம்பவங்கள் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அமைப்பு
இதையடுத்து கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் ராஜபாண்டியன், ஜாபர், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்ஐக்கள் பாண்டியம்மாள், ஜெகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் யார் என்பது தெரியவந்தது.

நகைகள் மீட்பு
இதையடுத்து அத்திப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், கண்ணப்பநகரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 76 பவுன் நகைகள் மற்றும் 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்குமூலம்
திருடர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வேலாண்டி பாளையத்திலுள்ள கடைக்குள் செல்லும் போது, அங்குள்ள வளையல் , நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் பளபளவென மின்னியது. அத்தனையும் தங்கம் என நினைத்து சந்தோஷத்துடன் அள்ளி சென்று ஏமாந்துவிட்டோம் என்று கூறினார்கள். கைதான இருவரில் கண்ணன் மீது 5 காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications