கிலோ கணக்கில் நகையை அள்ளிய களவாணிகள்.. கடைசியில் காத்திருந்த ஷாக்.. கோவை சம்பவம்
கோவை: கோவை அருகே நகைக்கடையில் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்து ஏமாந்த 2 திருடர்கள் போலீசாரிடம் சிக்கி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அல்ஷிபா. இவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்பிலான ஒரு கிராம் தங்க நகைகளான கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
அதே நாளில் கேவை இடையர்பாளையத்திலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோவை துடியலூர் இடையர்பாளைத்தை சேர்ந்தவர் கோபால்ராஜூ. கொங்கன் ரயில்வேயில் தலைமை பொறியாளராக உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியிடம் என்பதால் கடந்த மே மாதம் குடும்பத்துடன் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார்.

நகை கொள்ளை
இந்நிலையில் கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து கோபால்ராஜூ வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த இரு திருட்டு சம்பவங்கள் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அமைப்பு
இதையடுத்து கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் ராஜபாண்டியன், ஜாபர், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்ஐக்கள் பாண்டியம்மாள், ஜெகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்கள் யார் என்பது தெரியவந்தது.

நகைகள் மீட்பு
இதையடுத்து அத்திப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், கண்ணப்பநகரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் கடை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 76 பவுன் நகைகள் மற்றும் 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்குமூலம்
திருடர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வேலாண்டி பாளையத்திலுள்ள கடைக்குள் செல்லும் போது, அங்குள்ள வளையல் , நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் பளபளவென மின்னியது. அத்தனையும் தங்கம் என நினைத்து சந்தோஷத்துடன் அள்ளி சென்று ஏமாந்துவிட்டோம் என்று கூறினார்கள். கைதான இருவரில் கண்ணன் மீது 5 காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications