பொள்ளாச்சியில் மீண்டும் சோகம்.. கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாவட்டம் ,பொள்ளாச்சியில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியாகிவிட்டனர்.
கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த சிலர் ஒரு காரில் பழனி கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது கார் நிலைத்தடுமாறி கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர்.

பலியானவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்: பிரகாஷ் (48), பூஜா (45), தாரணி (50), குழந்தைகள் சுமதி (8), லதா (9) உள்பட 6 பேர் உயிரிழப்பு












Click it and Unblock the Notifications