கடவுளான ட்ரைவர்! வெறும் 68 நிமிஷம் தான்! கோத்தகிரி டூ கோவை! பச்சிளம் குழந்தையுடன் பறந்த ஆம்புலன்ஸ்!
கோவை : ஒரு உயிரைக் காக்கும் மருத்துவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அவர்களைப் போலவே போற்றப்பட வேண்டிய , மதிக்கப்பட வேண்டியர்வர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள். பரிதவிக்கும் உயிரைக் காக்க தங்கள் உயிரை துச்சமென மதித்து வாகனம் இயக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களால் காப்பற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். அப்படி ஒரு சம்பவம் தான் கோவையில் நடந்திருக்கிறது.
கோத்தகிரியில் இருந்து கோவைக்கு 68 நிமிடத்தில் பயணம் செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்து பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை மேல் சிகிச்சைக்காக புயல் வேகத்தில் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோத்தகிரி தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாந்தநாடு பகுதியை சேர்ந்த டெண்யா - பவித்ரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.

பச்சிளம் குழந்தை
உடனே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் கோத்தகிரியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விவரங்கள் கூறி விரைவாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநர் அக்கீம் மற்றும் செவிலியர்,உதவியாளர்களுடன் குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கோவை புறப்பட்டு சென்றனர்.

கடவுளான ஓட்டுனர்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரில் ஏற்ப்படாதவாறு தங்களது ஆம்புலன்ஸ் வாட்ஸ் அப் குழுக்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைக்கு உடனே தீவிர அளிக்கப்பட வேண்டும். எனவே சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம்,காரமடை,கோவில் பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதி வழியாக ஆம்புலன்ஸ் பயணம் நடைபெறும் எனவே எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

வெறும் 68 நிமிடம்
இதனடிப்படையில் ஆம்புலன்ஸ் கோத்தகிரியில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னும் பின்னும் 6 ஆம்புலன்ஸ்களும் குழந்தையை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் எச்சரிக்கை ஒலி எழுப்பிய நிலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி கோவையை நோக்கி சென்றனர். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்கீம் தன் உயிரையும் துச்சமென நினைத்து கோத்தகிரியில் இருந்து கோவைக்கு 68 நிமிடத்தில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தார்.

கண்ணீர் மல்க நன்றி
தற்போது பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இருந்து கோவைக்கு இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் நிலையில் 68 நிமிடத்தில் ஆம்புலன்ஸை இயக்கி வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் டெண்யா,பவித்ரன் தம்பதி ஆனந்த கண்ணீருடன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications