வானதிக்கு எதிராக செக்.. கோவை தெற்கில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் ஒன்று திரண்டு மறியல்
கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
அவரோடு அதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் போராட்டத்தில் பங்கேற்றார். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார்- இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்
இந்நிலையில வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு இன்று டோக்கன் தந்ததாக கூறப்படுகிறது. அப்படி டோக்கன் தந்த சிலரை பிடித்து போலீசார் காங்கிரஸ் கட்சியினர் ஒப்படைத்தனராம்.

காங்கிரஸ் மறியல்
ஆனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை கூறி கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்;டது. புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கோவை
இதற்கிடையே கமல்ஹாசன், யாராவது வாக்குக்கு பணம் தந்தாலோ அல்லது டோக்கன் தந்தாலோ அவர்கள் தன்னை டேக் செய்யும் படிகூறியிருந்தார். அப்படி டேக் செய்பவர்கள் தானே நேரில் வருவேன் என்று கூறியிருந்தார். இப்படி நூதன முறையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த கமல், இன்று காலை சென்னையில் வாக்குபதிவு செய்த நிலையில், கோவை செல்கிறார். அங்கு தனது தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிடுகிறார்.
Recommended Video

சந்தேகம் இல்லை
முன்னதாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார். வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று உற்சாக தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications