Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 கோடி கேட்கும் கோவை நட்சத்திர ஓட்டல் சமையல் கலைஞர்.. பிசியோதெரபியால் தலைகீழான வாழ்க்கை?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்த சமையல் கலைஞர் லோகநாதன் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு பிசியோதெரபி சிகிச்சையின்போது எலும்பு முறிவு ஏற்பட்டு செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் சமையல் கலைஞர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கு ஆம்புலன்ஸில் வந்து மனுதாக்கல் செய்தார்.

கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தைச் சேர்ந்த 40 வயதாகும் லோகநாதன் என்பவர் சமையல் கலைஞர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற லோகநாதன் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவர் முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டு கழுத்துக்குக் கீழ் செயல்படாமல் போனது.

Can Physiotherapy Go Wrong Coimbatore star hotel Chef Seeks 1 Cr Relief After Bone Fracture

இதையடுத்து சிகிச்சைக்குப் பின் கோவையில் வசித்து வருகிறார். சக்கர நாற்காலி மூலம் மட்டுமே அமர்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் லோகநாதனை தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார்களாம்.

பின்னர் அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் அவருக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டதாம். இந்த நிலையில் நேற்று கோவை நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் படுத்த படுக்கையாக வந்தார். அவருடன் தாய் கவுரியும் வந்தார். பின்னர் கோவை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அதில் சமையல் கலைஞர் லோகநாதன் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தேன். அங்கு விபத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் வந்து வசித்து வருகிறேன். கோவை சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியர் மையத்தில் எனக்குப் பயிற்சி மாணவர்கள் மூலம் பிசியோதெரபி சிகிச்சை தந்தார்கள்.

அப்போது நான் மறுத்தபோதும், வலுக்கட்டாயமாக சிகிச்சை அளித்தனர். இதில் எனக்கு தொடைப் பகுதியில் இருந்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் முழுமையாக படுக்கையை விட்டு எழ முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மையத்தினர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. ஏற்கனவே விபத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த நான், எலும்பு முறிவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே சம்பந்தப்பட்ட மையத்தினர் எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், தவறான சிகிச்சையால் நிரந்தரமாக செயல்பட முடியாத சூழல் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தை நாடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார். இதனிடையே இந்த வழக்கின் போது, லோகநாதனின் நிலையைப் பார்க்க வேண்டும் என்று நீதிபதி கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் வந்த அவரை, கோர்ட் அதிகாரிகள் பார்வையிட்டு, அவர் தாக்கல் செய்த மனுவை ஆம்புலன்ஸில் இருந்தபடி, கைரேகை பெற்று வாங்கிச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+